ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில் நெல்லூர் நகரத்தில் அமைந்துள்ளது. இது ரங்கநாதர் என்றழைக்கப்படும் விஷ்ணு பஹவானுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தல்பகிரி ரங்கநாதஸ்வாமி கோயில் என்றும் ரங்கநாயகுலு என்றும் அழைக்கப்படுகிறது.
பெண்ணா ஆற்றின் கரையில் எழும்பியுள்ள இந்த புராதனமான கோயில் 12ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதாக கருதப்படுகிறது. இந்த கோயிலின் பின்னணியில் ஏராளமான புராணக்கதைகள் சொல்லப்படுகின்றன.
அவற்றில் ஒரு கதையின்படி, அகஸ்திய முனிவர் இந்த ஸ்தலத்தில் பௌண்டரிக யாகத்தை நிகழ்த்தியதாகவும், அதில் திருப்தியடைந்த மஹாவிஷ்ணு அவருக்கு அனுக்கிரகித்ததாகவும் சொல்லப்படுகிறது.
பல்லவர்காலத்தை சேர்ந்த கோயிற்கலை பாணியில் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலில், காலிகோபுரம் (காற்றுக்கோபுரம்) என்று அழைக்கப்படும் 70 அடி உயர கோபுரத்தின் உச்சியில் 10 தங்கக்கலசங்கள் கம்பீரமாய் ஜொலிக்கின்றன.
நெல்லூர் நகரத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக இந்த ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில் புகழுடன் அறியப்படுகிறது. நகரத்துக்குள்ளேயே அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு மிகச்சுலபமாக பயணிகளும் பக்தர்களும் சென்றடையலாம்.