நெர்சா கிராமத்திற்கு வருகை தரும் பயணிகள் இந்த மஹடை செழுமைப்பள்ளத்தாக்கிற்கு விஜயம் செய்து சுற்றிப்பார்ப்பது நல்லது. இது ஒரு அற்புதமான சிற்றுலாஸ்தலமாகும்.
மனித ஆக்கிரமிப்புக்கு உட்படாத இந்த பன்முக உயிரியல் அம்சம் கொண்ட செழுமைப் பள்ளத்தாக்கானது உலகில் காணப்படும் இதுபோன்ற பள்ளத்தாக்குகளில் ஒன்றாக அறியப்பட்டுள்ளது.
எனவே இந்த பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் பலவிதமான உயிரினங்களையும் பறவையினங்களையும் பயணிகள் பார்த்து மகிழலாம். அழிந்து வரும் சில அரிய வகை வௌவால் இனங்களையும் இந்த பள்ளத்தாக்கில் காண முடிகிறது.