கேரள தமிழ்நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள இந்த எலம்பலை மலையானது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் காட்டுயிர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.
நீலம்பூருக்கு அருகிலேயே உள்ள இந்த மலைப்பகுதியை சாலை மார்க்கமாக சுலபமாக சென்றடையலாம். சாலியார் ஆறு உற்பத்தியாகும் ஸ்தலமாகவும் இந்த மலைப்பகுதி அறியப்படுகிறது. அடர்ந்த காட்டுப்பகுதி மற்றும் மூங்கில் வனத்தை கொண்டிருக்கும் இந்த மலையின் தரிசனம் பயணிகளுக்கு மெய்மறக்கவைக்கும் ஒரு அனுபவமாக இருக்கும்.
இம்மலைப்பகுதியில் பலவகையான வனவிலங்குகளும் நிறைந்திருப்பதால் காட்டுயிர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இருப்பதில் வியப்பில்லை. யானைகள், மான், நீலக்குரங்குகள், காட்டெருமைகள், கரடி, காட்டுப்பூனைகள் மற்றும் காட்டு நாய்கள் போன்றவை இந்த வனப்பகுதியில் வசிக்கின்றன.
கண்ணைக்கவரும் இயற்கைக்காட்சிகளுடன் பச்சைக்கம்பளம் விரித்தாற்போன்ற சரிவுகளுடன் தோற்றமளிக்கும் இம்மலைப்பிரதேசம் புகைப்பட ஆர்வலர்களுக்கு திகட்டாத ஒரு ஸ்தலமாகும். குடும்பச்சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு பயணம் போன்றவற்றுக்கு எலம்பலை மலை உகந்த இடமாக விளங்குகிறது.