நிஜாமாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நிஜாமாபாத் கோட்டை வரலாற்றுப்பின்னணியோடு கூடிய ஆன்மீக முக்கியத்துவத்தையும் கொண்டு விளங்குகிறது. மாநிலத்தலைநகரான ஹைதராபாதிலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ளதால் இந்த கோட்டைப்பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் எளிதில் பயணிக்கலாம்.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லைப்பகுதியில் வீற்றிருப்பதால் அம்மாநிலத்திலிருந்தும் அதிகப்பயணிகள் இந்த கோட்டைக்கு விஜயம் செய்கின்றனர்.
10ம் நூற்றாண்டினை சேர்ந்த இந்த கோட்டை ஒரு மலையின்மீது கம்பீரமாக வீற்றுள்ளது. இந்த மலையானது நிஜாமாபாத் நகரத்தின் தென்பகுதியில் காணப்படுகிறது. நிஜாமாபாத் மக்களால் பெருமையாக கருதப்படும் இந்த கோட்டை ராஷ்டிரகூட வம்ச மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது.
300 மீட்டர் உயரத்தில் கண்கவரும் தோற்றத்துடன் வீற்றுள்ள இந்த கட்டுமானம் அந்நாளைய கட்டிடக்கலை மஹோன்னதத்தின் சாட்சியாகவே காட்சியளிக்கிறது. காலப்போக்கில் பல்வேறு ராஜ வம்சங்களை சேர்ந்த மன்னர்களின் ஆட்சி மாறி மாறி நிகழ்ந்தபோது இதன் ஆதி கட்டமைப்பில் மாற்றங்களும் புதுப்பிப்புகளும் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.