நிருத்ய கிராமத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெசர்கட்டா ஏரிக்கு அருகில் பாரம்பரிய நடனக் கலைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலில் ஒடிசி குரு கெலுசரண் மொஹாபத்ராவின் உருவத்தோடு பலவிதமான அபிநயங்களை காட்டும் எண்ணற்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
நிருத்ய கிராமத்தை நிர்மாணித்த ப்ரோத்திமா கௌரி பேடி அவர்களின் குருவான கெலுசரண் மொஹாபத்ரா, பாரம்பரிய நடனக் கலைஞராகவும், குருவாகவும் , ஒடிசி நடனக் கலையின் முன்னேற்றத்துக்காக அயராது பாடுபட்டவராகவும் அறியப்படுகிறார்.
அதுமட்டுமல்லாமல் ஜனவரி 8, 1926-ல் பிறந்த மொஹாபத்ரா 20-ஆம் நூற்றாண்டில், இந்திய பாரம்பரிய நடனக் கலைகளை மறுசீரமைத்த மகத்தான பணிக்காக புகழ்பெற்றவர். இவர் 2004 ஏப்ரல் 7-ஆம் தேதி அன்று இயற்கை எய்தினார்.