நூப்ரா பள்ளத்தாக்கில் உள்ள மிகவும் பிரபலமான மடாலயமாக சாம்ஸ்டான்லிங் மடாலயம் உள்ளது. நூப்ரா பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மடாலயத்திற்கு ஒருமுறை வந்து செல்வது சிறந்த அனுபவமாக இருக்கும்.
கியாகர் மற்றும் சுமுர் கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த மடாலயத்தை அமைத்தவர் ட்சுட்ரிம் நீமா லாமா என்பவராவார். இந்த மடாலயத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள பௌத்த உருளைகள், சுவரோவியங்கள் மற்றும் பௌத்த சிலைகளின் அணிவகுப்பைக் காண முடியும்.
1962-ம் ஆண்டு, திபெத்தின் மதத்தலைவரான உயர்திரு தலாய்-லாமா அவர்கள், இந்த மடாலயத்திற்கு வருகை புரிந்து இங்குள்ள 7 கோவில்களையும் திறந்து வைத்தார். கிட்டத்தட்ட 50 துறவிகள் இங்கு வசித்து வருகின்றனர். அவர்களது தினசரி தேவைகளை மடாலய நிர்வாகம் கவனித்துக் கொள்கிறது.