தின்மான் ஹர்டாலின் அரண்மனை, அக்காலத்தில் சகோதரர்களுக்கிடையே நிலவிய அன்பு மற்றும் மரியாதையின் எடுத்துக்காட்டாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடக்கலை அற்புதம், வளமான வரலாற்று குலமரபைக் காட்டுவதாக உள்ளது.
இவ்வரண்மனை, தன் நீண்டநாள் தோழியுடன் காதல் வயப்பட்டுள்ளதாக தன் மீது குற்றம் சாட்டிய தன் தம்பியாகிய ஜூஜாலின் பொருட்டு, அந்த குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் தன் உயிரை தியாகம் செய்தவரான தின்மான் ஹர்டாலை கௌரவிக்கும் நோக்கில் கட்டப்பட்டதாகும்.
ஆன்மீகத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட ஆத்மாவாக விளங்கிய தின்மான் ஹர்டாலின் மேல் பெரும் மதிப்பு கொண்டிருந்த மக்கள் அவரது திடீர் மரணத்துக்குப் பின் இந்த மாளிகையை கட்டியுள்ளனர்.
சிறப்பான கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இதன் பிரம்மாண்டம், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்துகிறது. பழங்காலத்தில் வாழ்ந்த உள்ளூர் கைவினைக் கலைஞர்கள் தங்களின் உயர்வான கற்பனா சக்தி மற்றும் கலைத்திறன் ஆகியவற்றைக் கொண்டு தின்மான் ஹர்டாலை கௌரவப்படுத்தும் வகையில் இதன் கட்டுமானத்தில் தங்கள் கைவண்ணத்தைக் காட்டியுள்ளனர்.
காண்போரை கட்டிப்போடும் அழகோடு விளங்கும் தின்மான் ஹர்டால் அரண்மனை, சகோதரர்களுக்கிடையே இருக்கக்கூடிய அன்பு மற்றும் மரியாதையை விளக்குகிறது. வருடந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இதனை பார்த்துச் செல்ல மிக்க ஆர்வத்தோடு வருகின்றனர்.