பேடாப் பள்ளத்தாக்கு, அதன் இயற்கை அழகால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு புகழ் பெற்ற ஸ்தலம். பாலிவுட் படமான 'பேடாப்' பின் நினைவாக இவ்விடம் இபெயரைப் பெற்றது.
இப்படத்தின் பல்வேறு காட்சிகள் இவ்விடத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டது. பஹல்கமிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இவ்விடம், சேஷ்நாக்கின் ஆற்றங்கரையாக திகழ்கிறது.
பனி மூடிய மலைகள், டியோடர் காடுகள், பைன் மரங்கள், பளிங்கு போன்ற தெளிவான ஓடைகள், மிதுவான வெயில் மற்றும் வில்லோ மரங்களை கொண்ட இந்த இடம் பயணிகளை ஈர்க்கும்.
பைசரண், டுலியன் ஏரி மற்றும் பஹல்கமுக்கு மிக அருகாமையில் இந்த பள்ளத்தாக்கு இருப்பதால், பயணிகளை இந்த இடம் கவர்ந்து இழுக்கிறது. மேலும் பஹல்கம் வளர்ச்சி குழு இவ்விடத்தின் வளர்ச்சிக்காக மேலும் பாடு படுவதால், இவ்விடம் இன்னும் புகழ் பெற்று விளங்குகிறது.