மாமலேஷ்வர் கோவில் என்பது அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்காக எழுப்பப்பட்ட கோவிலாகும். இதுவும் புகழ் பெற்ற புனித ஸ்தலம். இக்கோவில் 12-ஆம் நூற்றாண்டில் ஜெயசிம்ம ராஜாவால் கட்டப்பட்டது.
இக்கோவில் பஹல்கமிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் லிட்டர் நதிக்கரையில் அமைந்துள்ளது. இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இக்கோவில் முழுவதும் கல்லால் கட்டப்பட்டது.
இக்கோவிலில் உள்ள தண்ணீர் ஊற்று ஒன்றை தொட்டி போல் அமைத்து அதில் ஒரு சிவ லிங்கமும் வைத்துள்ளார்கள். இக்கோவிலுக்கு பல பக்தர்கள் கூடி சிவனுக்கு பூஜையும் செய்வார்கள். இந்த கோவிலுக்கு மிக அருகாமையில் இருக்கும் தலம் தான் பைசரண்.