சூரியக் கோவில் கர்கொடா ராஜாங்கத்தை ஆண்ட லலிதாதித்ய முக்தாபிட அரசரால் கட்டப்பட்டது. இந்த அரசரின் முன்னோடியான ராணாதித்யா முக்தாபிட அரசரால் இந்த கோவிலின் கட்டுமானப்பணி ஆரம்பமாகிவிட்டதாக நம்பப்படுகிறது.
இந்த கோவில் ஸ்ரீநகரிலிருந்து 64 கி.மீ. தூரத்திலும் அனந்த்நாக்கிலிருந்து வெறும் 7 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. புராணத்தின் படி இக்கோவில் பாண்டவர்கள் வாழ்ந்த காலத்திலேயே உள்ளது என்று நம்பப்படுகிறது. இந்த மேட்டு நிலத்திலிருந்து பார்த்தால் மட்டனின் அகலப் பரப்பளவும் தெரியும்.