இந்த காஞ்சன்கர் எனும் ஸ்த்லம் பாகுர் மாவட்டத்திலுள்ள லிட்டிபாரா வட்டத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவே உள்ள ஒரு மலை உச்சியில் இந்த புராதன கட்டமைப்பு காணப்படுகிறது.
நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும் இந்த புராதன கோட்டை வளாகத்தில் நாம் எழுப்பும் சப்தங்கள் விசித்திரமான முறையில் எதிரொலிப்பது ஒரு ஆச்சரியமான அம்சமாகும். பஹாரியா வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் வசித்த கோட்டையாக காஞ்சன்கர் கருதப்படுகிறது.