பாகுர் நகரத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள பாகுர் ராஜ்பரி மாளிகையின் ஒரு அங்கமாக இந்த நித்யகாளி மந்திர் வீற்றிருக்கிறது. இது மிகப்பழமையான கோயிலாகும்.
இங்குள்ள கடவுள் சிலை கருங்கல்லில் வடிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் இந்த காளிதேவியை காக்கும் கடவுளாக பூஜித்து வழிபடுகின்றனர். பாகுர் ராஜ குடும்பத்தினரோடு தொடர்பு படுத்தப்படும் இந்த கோயில் ஸ்தலம் நகர ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கிறது.