1204ம் ஆண்டில் அஹுகா மற்றும் மண்யுகா எனும் இரு உள்ளூர் வணிகர்களால் கட்டப்பட்ட இந்த பைஜ்நாத் சிவன் கோயில் பாலம்பூர் நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.
பாலம்பூர் நகர மையத்திலிருந்து 16 கி.மீ தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் ஸ்தாபிக்கப்பட்ட நாளிலிருந்தே பல புதுப்பிப்புகளை கண்டு வந்துள்ளது.
கோயில் வளாகத்தின் முன் வாசல் பகுதியில் ஆதிகாலத்திலேயே இந்த ஸ்தலத்தில் வீற்றிருந்த சிவன் சன்னதி காணப்படுகிறது. இந்த கோயிலின் தற்போதைய வடிவமைப்பு நகர பாணி கோயிற்கலை அம்சங்களை கொண்டுள்ளது. இதுவே புராதன காலத்தில் வடஇந்திய கோயிற்கலை மரபாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோயிலின் கருவறையில் சுயம்புவாக உருவான சுயம்புலிங்கம் வீற்றுள்ளது. கருவறையின் மீது உயரமான விமானக்கூரையும் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், நுழைவாயில் அமைப்பிலிருந்து நீளும் பாதையானது இரண்டு பிரம்மாண்ட பலகணி மாடங்களைக்கொண்ட சதுரமான மண்டபத்தில் முடிகிறது. மண்டபத்திற்கு முன்னால் உள்ள நான்கு தூண்களைக்கொண்ட விதான அமைப்பின் கீழ் சிவபெருமானின் வாகனமான நதி சிலையும் காணப்படுகிறது.
கோயிலின் வெளிச்சுவர் மற்றும் வெளிவாசல் அமைப்பில் பல தெய்வங்களின் சித்தரிப்புகள் மற்றும் ஆன்மீக குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன.