காங்க்ரா மாவட்டத்திலுள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக இந்த புண்ட்லமாதா கோயில் பிரசித்தமாக அறியப்படுகிறது. 5 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் காங்க்ராவிலுள்ள மிகப்பழமையான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும்.
பசுமையான தேயிலைத்தோட்டங்களின் நடுவே அமைந்திருப்பது இந்த கோயிலின் அழகை மேலும் கூட்டுகிறது. இந்த கோயிலின் வடிவமைப்பில் வரலாற்றுக்காலத்திற்கு முந்தைய கட்டிடக்கலை அம்சங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த கோயிலில் செய்விக்கப்படும் பூஜைகளும் சடங்குகளும் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரிய பின்னணியை கொண்டுள்ளன. மிக சுலபமாக சென்றடையக்கூடிய பாதையில் அமைந்துள்ளதால் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்களும் பயணிகளும் வருகை தருகின்றனர்.