திருவாவினன்குடி ஆலயம், குழந்தை வேலாயுதசுவாமி ஆலயம் என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. பழனியில் இருக்கும் ஆலயங்களில் இந்த திருவாவினன்குடி ஆலயமும் ஒரு பழமையான ஆலயம் ஆகும்.
இந்த ஆலயத்தில் முருகப் பெருமான் தங்கி இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஆலயம் திருவாவினன்குடி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு புனித தீர்த்தமும் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த ஆலயம் பலமுறை பலரால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கண்டனூரைச் சேர்ந்த கே.பி.எஸ். செட்டியார் மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் செட்டியார் போன்றோர் இந்த ஆலயத்தை புதுப்பிக்க பெரிதும் உதவி செய்திருக்கிறார்கள்.