ஜெஸ்ஸொரே ஸ்லோத் கரடிகள் சரணாலயம் பாலன்பூரிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள ஸ்லோத் கரடிகளை பாதுகாப்பதையே மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த சரணாலயம் அமைக்கப்பட்டது.
180 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு பரந்து விரிந்த இந்த சரணாலயம், பானஸ்கந்தா மாவட்டத்தில் அமையப்பெற்றிருக்கிறது. இந்தப் பகுதி 1978-ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சரணாலயத்தில் ஸ்லோத் கரடிகளை தவிர கழுதை புலி, புனுகு பூனை, சிறுத்தைப்புலிகள், காட்டுப் பூனை, முள்ளம்பன்றி, சாம்பார் ஓநாய் மற்றும் சில வகை காட்டுப்பன்றிகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
மேலும் இந்த சரணாலயம் எண்ணற்ற பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இருப்பிடமாக உள்ளது. இந்த சரணாலயம் தார் பாலைவனத்தில் உள்ள ஆரவல்லி மலை மீது அமையப்பெற்றுள்ளது.
இங்குள்ள மரங்கள் பாலைவனம் நீண்டு வருவதை தடுக்கின்றன. குளிர்காலமே இந்த சரணாலயத்தை பார்ப்பதற்கு மிகவும் உகந்த பருவம் ஆகும்.