பஞ்குலாவின் இருக்கும் கள்ளிச்செடி (கேக்டஸ்) தோட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். பல அரிய வகை தாவரங்கள் இங்கிருக்கின்றன.
ஒரே வளர்ச்சிப் பருவம் மற்றும் இனத்தைச் சேர்ந்த கள்ளிச் செடிகள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஒபுன்டியாஸ், ஃபெரோகேக்டஸ், அகாவஸ், காலம்னார் கள்ளிகள், எசினோசெரஸ் மற்றும் மம்மிலாரியஸ் ஆகிய பலவகை கள்ளிகள் இங்கு உள்ளன.
தேசிய கள்ளிச்செடி மற்றும் சதைப் பற்றுள்ள தாவர பூங்காக்கள் ஆராய்ச்சி மையம் இங்குள்ள செக்டார் 5யில் அமைந்துள்ளது. முதன்மை கட்டிடக்கலைஞராக இருந்து இப்பூங்காவைக் கட்டிய முனைவர் ஜே.எஸ்.சர்காரியா இப்பூங்காவிற்கு பல வகையான சதைப்பற்றுள்ள தாவரங்களையும், கள்ளிகளையும் கொடையாக அளித்துள்ளார். பூங்காவின் கல்வியியல் பகுதியில் ஏராளமான போசாய் செடிகளும் உள்ளது.
அழியக்கூடிய நிலையில் உள்ள பலவகை செடிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு துவங்கப்பட்டுள்ள இப்பூங்கா தன் நோக்கத்தில் மாறாது இயங்கி வருகிறது. ஜீனஸ் கேராலமா என்ற ஒருவகை கள்ளிச்செடியின் அனைத்து வகையும் இங்கு இருக்கிறது. 2500க்கும் மேற்பட்ட கள்ளி மற்றும் சதைத் தாவரங்கள் இங்கு உள்ளன.
பலவகையான கள்ளிச் செடிகள் மேல் ஆர்வமுள்ள தாவரவியலாளர்கள் மற்றும் பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள். மருத்துவ குணமும் கொண்டுள்ள இச்செடிகள் பயணிகளை ஈர்க்கின்றன.
வருடந்தோறும் மார்ச் மாதத்தில் நடைபெறும் கள்ளிச்செடி கண்காட்சிக்கு ஏராளமான பயணிகள் வருகிறார்கள். ஒன்பது கண்ணாடி குடில்கள் கொண்ட இப்பூங்காவில் செடிகள் விலைக்கும் கிடைக்கின்றன.