ஹெமு என்ற பெயரில் பிரபலமாக அழைக்கப்பட்டு வந்த ஹேம் சந்தர் ஹரியானாவின் ரேவாரி பகுதியில் வசித்தவர் ஆவார். அவர் தன்னுடைய புத்தி சாதுர்யம், போர் தந்திரம் மற்றும் வீரத்தினால் சாம்ராட் ஹேம் சந்தர் விக்ரமாதித்யா என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டார்.
அவர் இந்தியாவின் முகலாய அரசரான அக்பரை விரட்டுவதற்காக, டெல்லியைப் பிடிக்கும் வகையில் வட இந்தியா முழுவதும் போர்களை செய்து வந்தார். இந்தியாவில் மீண்டும் இந்து அரசாங்கத்தை உருவாக்குவதுதான் அவருடைய கனவு!
இரண்டாவது பானிபட் யுத்தத்தில் அவர் முகலாயப் படைகளுக்கு எதிராக போரிட்டார். அவர் போரில் வெற்றி பெரும் நிலையில் இருந்த போது அவருடைய கண்ணில் ஒரு அம்பு தாக்கியது.
சுயநினைவை இழந்து கீழே விழுந்த ஹெமு சிறை பிடிக்கப்பட்டார். பானிபட் நகரத்திலுள்ள சாவ்தாபூரின் - ஜின்ட் சாலைக்கு அவர் கொண்டு வரப்பட்ட போது மரணமடைந்தார்.
அக்பர் முன்னிலையில், ஹெமுவின் தலையை வெட்டி, அதனை காபூலில் இருந்த டெல்லி தர்வாஸாவிலும் மற்றும் உடலை பிற இந்துக்கள் பார்க்கும் வகையில் டெல்லியில் உள்ள புரானகிலாவிலும் தொங்க விட்டனர். ஹெமுவின் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவருடைய தலை தொங்க விடப்பட்ட இடத்தில் சமாதியைக் கட்டினார்கள்.