பண்ணா நகரில் இருந்து, சுமார் 12 கிமீ தொலைவில், பண்ணா தேசியப் பூங்காவிற்கு அருகில் பாண்டவர் குகைகளும், நீர்வீழ்ச்சிகளும் அமையப்பெற்றுள்ளன. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருப்பதால், இவ்விடத்திற்கு எளிதில் வர முடியும்.
அங்குள்ள ஒரு ஊற்றிலிருந்து தோன்றும் இந்த நீர்வீழ்ச்சி, பண்ணா சுற்றுலாவின் சிறப்பம்சாகத் திகழ்ந்து வருகிறது. வருடம் முழுவதும் இந்த நீர்வீழ்ச்சியில் நீர் இருந்தாலும், மழைக்காலத்தில் சுற்றுலா செய்வது சிறப்பாக இருக்கும்.
சுமார் 100 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி ஒரு பெரிய நீர்தேக்கத்தில் விழுகிறது. நீர்வீழ்ச்சியின் அடிப் பகுதியில், பாண்டவர் குகைகள் அமைந்துள்ளது.
பாண்டவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, இங்கு தான் தஞ்சம் அடைந்தனர் என்பது வரலாறு. இவ்விடத்தைச் சுற்றியிருக்கும் இயற்கை அழகைக் காண சுற்றுலாப் பயணிகள் பலரும் இங்கு வருகின்றனர்.