குருத்வாரா பௌண்டா சாஹிப், பௌண்டா சாஹிப்பில், சீக்கியர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு பாரம்பரிய வழிபாட்டு தலமாகும். 10 வது சீக்கிய குரு, குரு கோபிந்த் சிங், தஸ்ஸம் கிரந்த் அல்லது 'பத்தாம் பேரரசரின் புத்தகம்’ என்ற சீக்கிய நூலின் ஒரு பெரும் பகுதியை இவ்விடத்தில் இடத்தில் எழுதினார் என்று நம்பப்படுகிறது. உள்ளூர் வாசிகள் குரு கோபிந்த் சிங் நான்கு ஆண்டுகளாக இங்கே தங்கியிருந்தார் என்று கூறுகின்றனர்.
ஒரு புராணப்படி, அவர் சவாரி செய்து கொண்டிருந்த குதிரை, இவ்விடத்திற்கு வந்ததும் மேற்கொண்டு அவ்விடத்தை விட்டு நகராமல், தானாகவே நின்றுவிட்டதாகவும், அதனால், குரு பௌண்டா சாஹிப்பில் தங்கினார் என்று கூறப்படுகிறது.
மற்றொரு புராணப்படி, குரு கோபிந்த் சிங், தனது தஸ்ஸம் கிரந்த் என்ற சீக்கிய சமய நூலை எழுத, ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த யமுனை நதி அவரது கட்டளைப்படி அமைதியுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
குருத்வாரா உள்ளே இருக்கும் தாலாப் அஸ்தன் என்ற இடத்தில் குரு கோபிந்த் சிங் தனது வேலையாட்களுக்கு ஊதியம் வழங்கினார் என்று கூறப்படுகிறது. மேலும் குருத்வாராவில் உள்ள ஸ்ரீ தஸ்தர் அஸ்தன் என்ற பகுதியில் தலைபாகை கட்டும் போட்டிகளை நடத்தினார் என்று கூறப்படுகிறது.
குருத்வாராவின் மற்றொரு ஈர்ப்பாக, குரு பயன்படுத்திய பேனாக்கள் மற்றும் அவரது காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதங்கள் போன்றவை ஒரு அருங்காட்சியகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.