குருத்வாரா ஷேர்கர்ஹ் சாஹிப், பௌண்டா சாஹிப்பிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சீக்கிய புனித யாத்திரை மையமாகும். இவ்விடம் 10 வது சீக்கிய குரு, குரு கோபிந்த் சிங்கால் ஒரு புலியை கொன்ற இடத்தின் மீது கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. புராணத்தின் படி, அவர் தனது கத்தியால் ஒரே வெட்டாக வெட்டி புலியை கொன்றதாகக் கூறப்படுகிறது.