பௌண்டா சாஹிப்பிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் கோத்ரா டாக் பத்தர் ஆகும். ஒரு அழகான சுற்றுலாத்தலமாக விளங்கும் இவ்விடத்தில் அதன் சிறப்பு வாய்ந்த பூங்கா, சுற்றுலா பங்களா, மற்றும் பெரிய நீச்சல் குளம் என்று ஒரு சாந்தமான தனிமையோடு செயல்படுகிறது. பவன்டா சாஹிப்பின் ஓய்வான சூழலைப் பிரிய மனமில்லாது பார்வையாளர்கள் இருக்கின்றனர்.
இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான அம்சமாக யமுனா நதியிலிருந்து உருவாக்கப்பட்ட செயற்கை ஏரி ஒன்று உள்ளது. அருகே அமைந்துள்ள சிப்ரன் ஆற்றல் நிலையம் இவ்விடத்திற்கு கூடுதல் ஈர்ப்பை சேர்க்கிறது. இந்த தனிப்பட்ட அமைப்பு முற்றிலும் நிலத்தின் அடியில் அமைந்துள்ளது.