சிர்மௌர், பௌண்டா சாஹிப்பிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். சிர்மௌரின் பண்டைய ராஜ்ஜியத்தின் பழைய தலைநகர் என அழைக்கப்படும் இவ்விடம், 1616 இல் ஜெய்சால்மர் ராஜா ரசலூவால் நிறுவப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஒரு புராணத்தின் படி, ஒரு நடனமாதுவின் சாபப்படி இந்த இடம் 11 ஆம் நூற்றாண்டில் ஒரு வெள்ளம் மூலம் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.