சோலாங்கி காலத்தில், படன் ஜெயின் மதத்தின் மையமாக விளங்கியதால், இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஜெயின் கோவில்களை காணலாம். முக்கியமான ஜெயின் கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது பஞ்சசார பர்ஷ்வனத் ஜெயின் தேரசர் ஜெயின் கோவில்.
இங்குள்ள பல கோவில்களின் தரை தளம் மார்பில் போன்ற பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. மேலும் இங்கே பல கற்களால் ஆனா சிற்பங்களை காணலாம். இவைகள் ஜெயின் கோவில்களின் முக்கிய அம்சங்களாகும்.
பழைய ஜெயின் கோவில்கள் மரத்தினால் கட்டப்பட்டிருக்கும். இந்த மாற்றத்தின் முக்கிய காரணமாக விளங்கியது உடா மேஹ்தா என்ற முதன்மை கட்டடக் கலைஞர்.
ஒரு கோவிலில் எலி ஒன்று எறியும் மெழுகுவர்த்தியை தன் வாயில் கவ்வி கொண்டு ஓடுவதை கண்டபின் தான் கோவில்களை மரத்துக்கு பதில் கற்களால் கட்டத் துவங்கினார்.