பத்தனம்திட்டா நகரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மஞ்சினிக்கரா தேவாலயம் அமைந்திருக்கிறது. இங்கு 1931-ஆம் வந்த மூன்றாம் மார் இக்னேஷியஸ் இலியாஸ் எனும் கிறிஸ்தவ பாதிரியார் மஞ்சினிக்கராவின் அழகில் மயங்கி 'இந்த இடம் நமக்கு அனைத்து சௌகரியங்களையும் வழங்குகிறது, எனவே நாம் இங்கயே நிரந்தரமாக தங்கி விடலாம்' என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
அதன் பிறகு தன் வாழ்நாள் முழுவதையும் இங்கேயே மகிழ்ச்சியுடன் கழித்த பாதிரியார் பிப்ரவரி 13, 1932-ஆம் ஆண்டு சொர்க்கலோக பதவியை அடைந்தார். இவருடைய சமாதி இன்றும் மஞ்சினிக்கரா தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இந்த தேவாலயம் கூடுதல் முக்கியத்துவம் அடைய துவங்கியது. மேலும் இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஓர்மபெருநாள் எனும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.