தேய்ன் அணை என்றழைக்கப்படும் ரஞ்சித் சாகர் அணை பூமியை தோண்டி கட்டப்பட்ட அணைகளிலேயே பெரிய அணையாகும். மேலும் இந்தியாவிலேயே இங்கே தான் அதிக சுற்றளவை கொண்ட சுழலியூட்டுங் குழாய்கள் உள்ளன.
தற்போது இது பஞ்சாபில் உள்ள மிகப்பெரிய ஹைட்ரோ எலெக்ட்ரிக் அணையாகும். ராவி நதியின் மீது அமைந்துள்ளது இந்த அணை. இதன் நகரியத்தை குருத்வாரா ஸ்ரீ சிங் சபா என்று அழைக்கின்றனர். அழகிய மலைகளும் ஏரியும் சூழ அமைந்திருக்கும் இந்த இடம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறது.