பழைய பட்டியாலா நகரத்தின் வடக்கு திசையில் அமைந்துள்ளது பரடாரி தோட்டம். இதன் பெயரை போலவே இந்த தோட்டத்தில் நுழைவாயிலாக 12 கதவுகள் உள்ளன. ரஜிந்தர் சிங் மகாராஜா ஆரம்ப காலத்தில் வாழ்ந்த பரடாரி அரண்மனைக்கு அருகில் தான் இந்த தோட்டம் கட்டப்பட்டுள்ளது.
இவர் இந்த தோட்டத்தில் பல அறிய வகை மரங்களையும் பூக்களையும் நட்டு வைத்தார். தற்போது இந்த தோட்டத்தில் முக்கியமான வரலாற்று ஆவணங்கள் கிடைக்கின்றன. மார்பில் கற்களால் செய்யப்பட ரஜிந்தர் சிங்கின் சிலை உள்ள இந்த இடம் அனைத்து வயதினரும் விரும்பும் வண்ணம் உள்ளது.