குருத்வாரா பஹிலா பாரா என்றும் அழைக்கப்படும் குருத்வாரா கய் படித்துறை, குரு நானக் தேவ் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குரு நானக் அவர்கள் இப்பகுதிக்கு வந்த போது இங்குள்ள அவரது தீவிர பக்தரான பகத் ஜைதாமாலின் இல்லத்தில் தங்கியிருக்கிறார்.
பின்னர் ஜைதாமால் தன் இல்லத்தை ஒரு தர்மசாலாவாக மாற்றியுள்ளார். பகத் ஜைதாமாலின் இல்லம் முதலில் குரு நானக் அவர்களின் வருகையாலும் பின்னர் குரு தேக் பஹதூர் அவர்களின் வருகையாலும் புனிதமடைந்துள்ளது.