புனிதமான கோயில்களுள் ஒன்றான இது, ராமபக்த ஹனுமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்களின் பிரார்த்தனைகளை செலுத்தும் மஹாவீர் மந்திர், அதிக மக்கள் வருகை தரக்கூடியதான வட இந்தியக் கோயில்களுள் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது.
1947 ஆம் வருடம் நடந்த நாட்டின் பிரிவினைக்குப் பின் ஏராளமான இந்து அகதிகள் பாட்னாவில் தஞ்சம் புகுந்த போது கண்டறியப்பட்ட இந்த கோயிலில் உள்ள சங்கத்-மோட்சன் சிலை பக்தர்களின் இதயத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.
மிகுந்த பக்தி சிரத்தையோடு கொண்டாடப்படும் ராம நவமி விழாவின் போது இங்கு சாரி சாரியாக மக்கள் வந்து வழிபாடு செய்கின்றனர்.