ஷேர்ஷாஹி என்ற பெயரிலும் வழங்கப்பட்டு வரும் ஷேர் ஷா சூரி மஸ்ஜித் ஒரு பிரசித்தி பெற்ற மசூதியாகும். ஆஃப்கன் பாணி கட்டுமானத்துக்கு இந்த மசூதி ஒரு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. 1540-1545 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஷேர் ஷா சூரி தனது ஆகாதிபத்தியத்தை நினைவூட்டும் வண்ணம் இதனை கட்டியுள்ளார்.
இந்த மசூதியின் வளாகத்தினுள் காணப்படும் குவிமாடம் ஒன்று எண்கோண கற்பலகை ஒன்றினால் மறைக்கப்பட்டுள்ளது. இந்த மசூதியின் நட்சத்திர அம்சம் யாதெனில் இதனைச் சுற்றி அமைந்துள்ள நான்கு சிறு குவிமாடங்கள் தாம்.
எந்த கோணத்திலிருந்து அல்லது எந்த திசையிலிருந்து பார்த்தாலும் மூன்று குவிமாடங்கள் மட்டுமே நம் பார்வைக்குக் கிடைக்கும் வண்ணம் உள்ள அமைப்பு இந்த குவிமாடங்களின் பிரத்யேகமான தன்மையாகக் கருதப்படுகிறது.
பாட்னாவின் கைகாத் மொஹால்லாவில் அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சீக்கிய கோயில், தக்த் ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
குருத்வாரா பஹிலா பாரா தாம் இப்பகுதியின் மிகப் பழமையான குருத்வாரா ஆகும். செவ்வக வடிவிலான ஒரு விஸ்தாரமான அரங்கின் நடுவில் அமைந்துள்ள சந்நிதியோடு காணப்படும் புதிய கட்டிடம் 1980 ஆம் வருடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.