இந்துக் கடவுளான சிவ பெருமானுக்கான புத்தா அமர்நாத் கோவில் பாட்னிடாப்பில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். மலையின் அடிவாரத்தின் பல்சாட்டா நீரூற்றுக்கு இடது புறத்தில், இயற்கையாக கிடைக்கும் வெள்ளைக்கல்லில் சிவலிங்கம் ஒன்றை இந்த கோவில் கொண்டிருக்கிறது.
இராவணனின், தாத்தாவாக கருதப்பட்ட பல்சாட்டா என்ற துறவி இந்த இடத்திலிருந்து தவம் செய்ததன் காரணமாகவே இந்த ஆற்றுக்கு பல்சாட்டா என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
ஆண், பெண் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் இந்து பண்டிகையான ரக்ஷா பந்தனின் போது இந்த கோவிலில் மிதமிஞ்சிய கூட்டம் இருக்கும். எனவே பாட்னிடாப்பில் உள்ள புத்த அமர்நாத் கோவில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாதலமாக இருக்கிறது. இந்த கோவிலை சுற்றுலாப் பயணிகள் பேருந்துகள் அல்லது ஜீப்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.