நாக் கோவில், பாட்னிடாப்பில் உள்ள மிகவும் அழகான, முக்கியமான பார்வையிடமாகும். ஒரு மலையின் உச்சியில் உள்ள இந்த கோவிலை சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளன.
600 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த கோவிலின் பெரும்பாலான பகுதிகள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதை நம்ப முடிகிறதா? இந்த கோவிலுக்குள் சூரிய வெளிச்சம் உள்ள போது மட்டும் தான் சுற்றுலா பயணிகள் நுழைய வேண்டும் என்பது இங்கு நிலவி வரும் நம்பிக்கை.
நாக பஞ்சமியின் போது மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தை வேண்டும் பெருந்திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிவார்கள். இந்த கோவிலுக்கு வருபவர்கள் வெறும் கையுடன் திரும்பியதில்லை என்று சொல்லப்படுகிறது.
மிகவும் குளிராக, ஜில்லென்றிருக்கும் குளிர்கால மாலைப் பொழுதுகளில் இந்த கோவிலிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மிகுந்த தைரியம் தேவைப்படும். எனவே தான், சாதாரணமாகவே மூடுபனியுடன், பார்க்கும் தூரம் 10 அடியாக குறைந்து போகும் இந்த காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் மாலை வேளைகளில் வர ஆர்வம் காட்டுவதில்லை.