பவுரி பகுதியில் இருக்கும் இன்னுமொரு முக்கிய ஆலயம் ஜவல்ப தேவி ஆலயமாகும். இந்த ஆலயம் பவுரியிலிருந்து 34 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. நவாலிகா என்ற ஆற்றின் இடது கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் 350 மீ பரப்பளவைக் கொண்டது.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் கடவுளான ஜவல்ப தேவி, தனது பக்தர்கள் கேட்கும் அனைத்தையும் தவறாது நிறைவேற்றி வைப்பார் என்ற நம்பிக்கை பரவலாக இந்த பகுதியில் உள்ளது. நவராத்தராஸ் காலத்தில் இந்த ஆலயத்தின் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.