பவுரியில் மிகவும் பிரபலமான ஆலயமாக கியுன்களீஸ்வர் மகாதேவ் ஆலயம் உள்ளது. அந்த ஆலயம் கிபி 8 ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கராச்சாரியா அவர்களால் கட்டப்பட்டது.
இந்த ஆலயத்தில் சிவபெருமான வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். மேலும் இந்த ஆலயத்தில் பார்வதி, கணபதி மற்றும் கார்த்திகேயா போன்ற தெய்வங்களின் சிலைகளும் உள்ளன.
அதுபோல் ராமர், லட்சுமனர் மற்றும் சீதா போன்ற தெய்வங்களின் சிலைகளும் இந்த ஆலயத்தில் உள்ளன. அலன்கன்டா பள்ளத்தாக்கின் பின்னனியில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்திலிருந்து, இமயமலையின் எழில் கொஞ்சும் பனிச் சிகரங்களை பார்த்து ரசிக்கலாம். இந்த ஆலயத்தில் மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.