பவுரி நகருக்கு அருகில் இருக்கும் இன்னும் ஒரு அழகிய பகுதி ஸ்ரீநகர் ஆகும். ஸ்ரீநகர் அலகண்டா என்ற ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. பவுரியிலிருந்து 29 கிமீ தொலைவில் இருக்கும் சிரிநகர், ஒரு பெரிய நகர பகுதியாகும்.
காலணி ஆட்சிக்கு முன்பாக இந்த சிரிநகர் பண்டைய கர்வால் அரசர்களின் தலைநகரமாக விளங்கி வந்தது. தற்போதைய சிரிநகர் கிபி 1879ல் கட்டப்பட்டது. இந்த நகர் ஏறக்குறைய 7.77 கிமீ பரப்பைக் கொண்டிருக்கிறது.
சார் தம் யாத்ரா செல்வோருக்கு இந்த பகுதி ஓய்வெடுக்கும் பகுதியாகவும் அமைந்திருக்கிறது. சிரிநகருக்கு அருகில் பிரபலமான பல இந்து சமய ஆலயங்கள் நிறைந்திருக்கின்றன.