சிவனுக்கும் பார்வதிக்கும் இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அர்த்தநாரீஸ்வரர் என்றால் பாதி ஆண், பாதி பெண் என்று பொருள். இங்கிருக்கும் சிலை ஆணாகவும், பாதி பெண்ணாகும் அமைக்கப்பட்டுள்ளது.
சிலைக்கு அருகில் உள்ள கல்லில் தெய்வங்களின் வாகனங்களாக எருது, சிங்கம் ஆகியவை வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது அனுமார், பைரவர் ஆகிய கடவுள் சிலைகளும் இங்கு உள்ளன.
வாயில், மண்டபம், கருவறை என பல கட்டமைப்பு ஆச்சரியங்களும் இங்கு உள்ளன.இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தால் பாதுகாக்கப்பட்ட தளமாக இக்கோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.