நகுலேஷ்வர் கோயில் எனப்படும் இந்த முக்கியமான கோயில் பித்தோராகர் நகரிலிருந்து 4 கி.மீ தூரத்திலும் ஷிலிங் கிராமத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலும் உள்ளது.
‘நகுல்’ மற்றும் ‘ஈஷ்வர்’ ஆகிய இரண்டு சொற்கள் நகுலேஷ்வர் எனும் பெயர் உருவாகியுள்ளது. இங்குள்ள மகிஷாமர்த்தினியில் நகுல் சிலை இமாலயத்தையும் ஈஷ்வர் என்பது கடவுளையும் (சிவன்) குறிக்கிறது.
கஜுராஹோ கோயில்களை ஒத்த கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இக்கோயிலில் 38 கடவுள்களின் கற்சிலைகள் வடிக்கப்பட்டிருக்கின்றன.
சிவன்-பார்வதி, உமா-வாசுதேவ், நௌவர்கா, சூர்யன், மஹிஷாசுரமர்தினி, வாமனர், குர்மா மற்றும் நரசிம்மர் ஆகியோரின் சிலைகளை இக்கோயிலில் பார்க்கலாம். பஞ்ச பாண்டவ சகோதர்களில் கடைசி இருவரான நகுலன் மற்றும் சகாதேவனால் இக்கோயில் கட்டப்பட்டதாக புராணிக நம்பிக்கை நிலவுகிறது.