போச்சம்பல்லி நகரில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன கட்டிடமான 101 தர்வாஜா இல்லம் அப்போதைய கிராம வருவாய்த்துறை தலைவரால் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் 101 கதவுகளை கொண்டு கட்டப்பட்டுள்ளதால் 101 தர்வாஜா என்று அழைக்கப்படுகிறது.
101 தர்வாஜா இல்லத்தின் ஒவ்வொரு கதவுகளின் வழியாகவும் நீங்கள் பார்க்கும் காட்சியை உங்கள் வாழ் நாள் பூராவும் உங்களால் மறக்க முடியாது. எனினும் இதன் அனைத்து கதவுகளும் எப்போதும் திறந்திருப்பதில்லை.
101 தர்வாஜா இல்லம் தற்போது சாந்தி நிகேதன் என்று பெயரிடப்பட்டு ஒரு பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் இங்கு வாரத்தில் ஒரு சில நாட்களில்தான் அனுமதிக்கப்படுவார்கள்.