வருடாவருடம் ஆகஸ்ட் / செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு கோலாகலமான திருவிழா இந்த ராம்தேவரா திருவிழாவாகும். வெகு தொலைவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இத்திருவிழாவை காண வருகை தருகின்றனர்.
இத்திருநாளில் பல மதங்கள், இனங்களைச் சேர்ந்தவர்களும் பாபா ராம்தேவ் கோயிலில் வழிபடுகின்றனர். இடைவிடாத பல பஜனைகளும் கீர்த்தனைகளும் இத்திருவிழாவின்போது பக்தர்களால் இசைக்கப்படுகின்றன.