பொள்ளாச்சியில் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில் உள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில், சிறுத்தைகள், புள்ளிமான்கள், காட்டெருமைகள், புலிகள், யானைகள், தொப்பித்தலை குரங்குகள், நீலகிரி வரையாடுகள், ஹனுமான் குரங்குகள், தலை நரைத்த ராட்சத அணில்கள், உள்ளிட்ட 34 வகையான பாலுட்டிகள், அதன் காடுகளில் காணப்படுகின்றன.
அரிய வகையான, தலை நரைத்த ராட்சத அணில்கள், தூவானம் நீர்வீழ்ச்சி, மற்றும் முழு சரணாலயத்தையும் பார்க்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம் ஆகியவை இச்சரணாலயத்தின் கவரும் அம்சங்களில் முக்கியமானவை ஆகும்.