மாசாணியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோயிலில், மூலக்கடவுளின் திருவுருவம் பாம்பின் உடலைக் கொண்டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியிலிருந்து சுமார் 24 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வழிபடுவோரின் பிரர்த்தனைகள், சுமார் மூன்று வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று நம்பப்படுவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள், அம்மனுக்கு உகந்த நாட்களாதலால், இவ்விரு நாட்களிலும், பக்தர்கள் வருகை, இங்கு மிக அதிகமாக இருக்கும்.
கோயிலின் மத்தியப் பகுதியில், பல வண்ணங்களில் பிரதிபலிக்கக்கூடிய வகையில் தீட்டப்பட்டுள்ள மாசாணியம்மனின் ஓவியம் ஒன்றைக் காணலாம். மாசாணியம்மன் கோயில், “நானன்” என்ற மன்னனுக்குச் சொந்தமான மரத்திலிருந்து மாம்பழம் ஒன்றை பறித்துத் தின்ற ஒரு பெண்ணின் பெயரில் அமைக்கப்பட்ட கோயில் என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.
அப்பெண்ணின் செயலைக் கண்டு கோபமுற்ற மன்னன், அவளுக்கு மரண தண்டனை விதித்தான். பின்னாளில், “மாசாணி” என்ற பெயரில் உள்ளூர்வாசிகள், அப்பெண்ணை வழிபட ஆரம்பித்தார்கள். ராமபிரான், சீதையைத் தேடிய சமயம், இக்கோயிலுக்கு வருகை தந்து, தியானம் செய்தார் என்றும் சான்றோர்கள் கூறுகின்றனர்.