கொங்கச் சோழர்களால் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டது இக்கோயில். அப்போது, இக்கோயில், “திருவாஹதேஸ்வரமுடையார் கோயில்” என்று பெயரிடப்பட்டது.
சிறப்பான கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற இக்கோயில், பழங்கால கட்டிடக்கலையில் ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்வதாக உள்ளது. சுப்ரமண்யஸ்வாமியின் வழிபாட்டு ஸ்தலமான இக்கோயில், தற்போது, “சுப்ரமண்யர் கோயில்” என்றே பிரபலமாக வழங்கப்படுகிறது.