ஆனைமலையில் அமைந்துள்ள, இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரின் வருகையால், 1961-ல் இதன் பெயர், இவ்வாறு மாற்றப்பட்டது. இச்சரணாலயம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1400 அடி உயரத்தில், சுமார் 958 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
பல வகையான காட்டு விலங்கினங்கள் மற்றும் செடியினங்களைக் கொண்ட பெருமை வாய்ந்தது இச்சரணாலயம். வன விலங்குகளான சிறுத்தைகள், மான்கள், புலிகள், யானைகள், புனுகு பூனைகள், காட்டெருதுகள், காட்டுக் கரடிகள், தேவாங்குகள், முள்ளம்பன்றிகள், ஓநாய்கள், எறும்புதிண்ணிகள், ஆகியன இப்பூங்காவினுள்ளே வாழ்ந்து வருகின்றன.
பல்வேறு பறவையினங்களான, சிவப்பு மரப் பறவை, புள்ளிப் புறா, மீசையுடன் கூடிய புல்புல், கறுப்புத் தலை ஓரியோல், ராக்கெட் வால் கரிச்சான் ஆகியவற்றையும் இங்கு காணலாம்.
இப்பூங்காவினுள் அமைந்துள்ள அமராவதி ஏரியில் முதலைகள் வாழ்கின்றன. நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், கண்ணைக் கவரும் ஆனைகந்தி ஷோலா, கரியன் ஷோலா, அணைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மலைகளைக் காண்பதற்காகவே, இங்கு கூடுகின்றனர்.