1940-களில் மார்ட்டிமோர் வீலர் என்பவரால் மிகவும் பரவலாக செய்யப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகள் நிகழ்ந்த இடம் தான் அரிக்கமேடு. சோழர்களின் பேரரசிற்கும், ரோமானிய பேரரசிற்கும் இடையே வாணிபம் நடைபெற காரணமாக இருந்த முக்கிய துறைமுக நகரமாக அரிக்கமேடு இருந்தது.
இந்த இடத்தில் தோண்டியெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் ரோமானிய நாகரிகத்தின் சான்றுகள் கிடைத்துள்ளன. ரோமானிய பேரரசின் கலைநயத்தை விளக்கும் மட்பாண்டங்கள் பெருமளவில் அரிக்கமேட்டில் கிடைத்து வருகின்றன.
அரிக்கமேடு மணிகளை தயாரிப்பதில் முக்கியமான மையமாக இருந்துள்ளது. அரிக்கமேட்டில் கி.பி.முதலாம் நூற்றாண்டிற்கு சற்று முன்னதாகவே மக்கள் குடியிருப்புகளை அமைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பாண்டிச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாக அரிக்கமேடு உள்ளது.