ஆங்கிலேயர்களின் அடக்குமுறையிலிருந்து தப்பித்து பிரெஞ்சு காலனியாக இருந்த பாண்டிச்சேரிக்கு தப்பி வந்த சுதந்திர போராட்ட வீரரான ஸ்ரீ அரவிந்த கோஸ் என்பவரால் 1926-ம் ஆண்டு அரவிந்தர் ஆசிரமம் நிறுவப்பட்டது.
இந்த ஆசிரமத்தின் தலைவராக 'அன்னை' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மீரா அல்பாஸ்ஸா என்பவர் நவம்பர் 26, 1926-ம் நாள் முதல் அவர் இறக்கும் காலம் வரையிலும் இருந்தார்.
ஸ்ரீ அரவிந்தரின் இறப்பிற்குப் பிறகு 1950-ல் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் சேவை நிறுவனத்தை நிறுவி அதன் தலைவராகவும் 'அன்னை' இருந்தார். இந்த ஆசிரமத்திற்குள் மூன்று வயத்திற்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் ஆசிரமத்தின் நிர்வாகத்திடமிருந்து சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே ஆசிரமத்திற்குள் புகைப்படம் எடுக்கவும் முடியும்.
காலை 8 மணியிலிருந்து 12 மணி வரையிலும் மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இந்த ஆசிரமத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஆசிரமத்திற்குள் இருக்கும் பரந்த நூலகத்திற்குள் இருக்கும் நூல்களை ஆசிரம அதிகாரிகளின் அனுமதியுடன் படிக்க முடியும்.