1826-ம் ஆண்டு சி.எஸ்.பெர்ரோடெட் என்பவரால் பாண்டிச்சேரி தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம் நிறுவப்பட்டது. இந்த பூங்காவில் இருக்கும் அரிய தாவர இனங்கள் அறிவியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கவர்ந்து இழுப்பதாக உள்ளன.
22 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்துள்ள இந்த தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம் ஆகியவை பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளிவரும் தெற்கு புற நுழைவாயிலுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது.
1960-ம் ஆண்டு முதல் பாண்டிச்சேரியின் தோட்டக்கலைத்துறையின் முக்கியமான மையமாக இந்த பூங்கா உள்ளது. இங்குள்ள மீன் காட்சியகத்தில் உள்ள பல்வேறு வகையிலான மீன் வகைகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புகழ் பெற்றவையாகும்.
இங்கு வந்து செல்வது பார்வையாளருக்கு நீர் வாழ்க்கையைப் பற்றிய தனித்தன்மையான அனுபவத்தைத் தருவதாக இருக்கும். இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான ரயில் வண்டி, நடனமாடும் நீரூற்று, சில அரிய வகை அலங்கார மீன்களையுடைய காட்சியகம் மற்றும் 6 நீரூற்றுகள் உள்ளன.