முதல் உலகப் போரில் இறந்த பிரெஞ்சு வீரர்களின் நினைவாக பாண்டிச்சேரியில் கட்டப்பட்டுள்ள இடம் தான் பிரெஞ்சு போர் நினைவுச் சின்னமாகும். 1971-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நினைவுச் சின்னம், ஒவ்வொரு ஆண்டும், பாஸ்டில் தினமான ஜுலை 14-ம் நாள் (பிரெஞ்சுப் புரட்சி நடந்த நாள்) மின்னும் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
இந்த நாளில் தான், இறந்து போன பிரெஞ்சு வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படும். இன்றும் நடந்து வரும் இந்த பாரம்பரிய மரியாதை, பாண்டிச்சேரிக்கும், பிரான்சிற்கும் இடையேயான ஆழமான தொடர்பை விளக்குவதாக உள்ளது.
பாண்டிச்சேரியிலுள்ள கௌபெர்ட் அவென்யூவில் உள்ள இந்த நினைவுச்சின்னத்திற்கு பார்வையாளர்கள் வருடம் முழுவதும் வந்து செல்லலாம். இந்த நினைவிடத்திற்கு வருவது போரில் இறந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதாக இருக்கும்.