பாண்டிச்சேரி வருபவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாக பாண்டிச்சேரி அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்திலுள்ள ஓவியக் காட்சிப் பகுதியில் சில சிற்பங்களும், அரிக்கமேடு பகுதிகளில் கண்டறியப்பட்ட ரோமானிய தொல்பொருள் சின்னங்களும் வைக்க்பட்டுள்ளன.
காலத்தால் அழியாத தொல்பொருள் சின்னங்களின் வைப்பறையாகவே இந்த மியூசியம் உள்ளது. இந்த மியூசியத்தில் சோழர்கள் மற்றும் பல்லவ மன்னர்களின் அரிய பித்தளை மற்றும் கற்சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இங்கே பாண்டிச்சேரி பகுதிகளில் சேகரிக்கப்பட்ட கூடுகளின் தொகுப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியத்திற்கு வரும் பார்வையாளர்கள் காலனீய ஆதிக்கத்தின் சுவடுகளை அறிந்து கொள்ளவும் மற்றும் பிரெஞ்சு காலனி ஆட்சி முறையைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ளவும் முடியும்.
நீங்கள் பாண்டிச்சேரிக்கு வந்து விட்டீர்களென்றால் பாரதி பூங்காவில் உள்ள பாண்டிச்சேரி மியூசியத்தை எளிதில் அடைந்திட முடியும்.