பொன்முடியின் முக்கிய சுற்றுலா அம்சமாக கருதப்படும் பெப்பரா வனவிலங்கு சரணாலயம் திருவனந்தபுரம்-பொன்முடி சாலையில், திருவனந்தபுரம் நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
இந்தப் பகுதியின் குடிநீர் விநியோக வசதிக்காக ஆரம்பத்தில் பெப்பரா அணை உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் அணையை சுற்றியுள்ள பகுதிகள் 1983-ஆம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
பெப்பரா வனவிலங்கு சரணாலயம் 53 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு நீங்கள் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, நீலகிரி நீலவால் குரங்கு போன்ற விலங்குகளை கண்டு ரசிக்கலாம்.
பெப்பரா வனவிலங்கு சரணாலயத்தின் மற்றொரு கவர்ந்திழுக்கும் அம்சம் பெப்பரா அணையாகும். இந்த அணையை கேரளா சுற்றுலா மேம்பாட்டு கழகம், மாநில வனத்துறை மற்றும் கேரளா நீர ஆணையத்துடன் இணைந்து சமீபத்தில் அழகுபடுத்தியுள்ளது.