டேனிஷ் பங்களா எனப்படும் இந்த வரலாற்று சின்னம் பூம்புகாருக்கு அருகில் தரங்கம்பாடியில் அமைந்துள்ளது. பயணிகள் மாசிலாமணிநாதர் கோயிலை பார்த்தபின் இந்த பழமையான கட்டிட வளாகத்தை பார்த்து ரசிக்கலாம்.
தற்போது இந்த வளாகம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டிருக்கிறது.